Tuesday, August 22, 2006

திருப்பள்ளியெழுச்சி - Thiruppaliyezhuchi


தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்தது
தனியன்கள் 
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீ;ர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் -- வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
 
தமேவமத்வா பரவாஸ{தேவம்
ரங்கேசயம் ராஜவ தர்ஹணீயம்
ப்ராபோதிகீம் யோhக்ருத ஸ_க்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
 
   
பாசுரங்கள் தொடக்கம்
 
*கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரிவரொடும்புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடுமுரசும்
அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --- (1)
 
கொழுங்கொடிமுல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசைமாருதமிதுவோ
எழுந்தன மலரணைப்பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனி நனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையின் அருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(2)
 
சுடரொளிபரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளிசுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள்நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(3)
 
மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசைதிசை பரந்தனவயலுள்
இரிந்தன சுரும்பினமிலங்கையர் குலத்தை
வாட்டியவரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து, அவபிரத--
மாட்டியவடுதிரலயோத்தியம்மரசே!
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(4)
 
புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்ததுபுலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம்புனைந்த
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான்
அமரர்கள்புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர்கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. ---(5)
 
இரவியர் மணிநெடுந் தேரொடுமிவரோ
இறையவர் பதினொருவிடையருமிவரோ
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டியவெள்ளம்
அருவரையனைய நின் கோயில்முன்னிவரோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(6)
 
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும் வந்திவனோ
எம்பெருமான்! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நு}க்க
இயக்கரும் மயங்கினர் திருவடித்தொழுவான்
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --(7)
 
வம்பவிழ் வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடிமுதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன்முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ
தோன்;றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரதலத்தினின்றகல்கின்றதிருள்போய்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(8)
 
*ஏதமில்தண்ணுமையெக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோடிசைதிசை கெழுமிக்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(9)
 
*கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் --
அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. --- (10)
 
அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.
 
* இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்
 
 
Also available in dynamic Tamil font at below URL.
http://www.ahobilam.com/tamil/divya-prabandam/thirupalliyezhuchi.htm

--
If you are not able to see the Tamil text.:
Use xp or higher, Change your browsers encoding to "Unicode - UTF-8", Use outlook 6.0 or higher.

No comments: